என்பிபிஎல் பாதுகாப்பு மற்றும் ஆபத்து சான்றிதழ்கள்

இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் பாரத் பில்பே லிமிடெட் (என்பிபிஎல்), தனது அனைத்து அலுவலகங்களுக்கும் பின்வரும் தரநிலைகளின் கீழ் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது: ஐஎஸ்ஓ 22301:2019 (வணிகத் தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு), ஐஎஸ்ஓ 27001:2022 (தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு) மற்றும் ஐஎஸ்ஓ 27701:2019 (தனியுரிமைத் தகவல் மேலாண்மை அமைப்பு)
இந்தச் சான்றிதழ்கள் என்பிபிஎல்லின் பின்வரும் தயாரிப்புகளுக்கு பொருந்தும்:
  • பாரத் கனெக்ட்
  • வங்கி கனெக்ட்
  • வணிகங்களுக்கான பாரத் கனெக்ட்
இந்த தளங்களில் வணிகத் தொடர்ச்சி, தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்வதில் எங்களின் உறுதியான அர்ப்பணிப்பை இச்சான்றிதழ்கள் வெளிப்படுத்துகின்றன.
  • ஐஎஸ்ஓ 22301:2019 தரநிலை – என்பிபிஎல், வணிகத் தொடர்ச்சி மேலாண்மை அமைப்பிற்கான (பிசிஎம்எஸ்) சான்றிதழைப் பெற்றுள்ளது. சேவைகளில் இடையூறு ஏற்பட்டாலும் அவை தொடர்ந்து கிடைக்க உறுதிசெய்யும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட மீட்பு இலக்குகள், வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பு, பேரிடர் மீட்பு தயார்நிலை மற்றும் காலமுறை பயிற்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • ஐஎஸ்ஓ 27001:2022 தரநிலை – என்பிபிஎல், தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பிற்கான (ஐஎஸ்எம்எஸ்) சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த அமைப்பு, அபாயங்களை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையின் மூலம் தகவல்களையும் கணினி அமைப்புகளையும் பாதுகாக்க உதவுகிறது. இதில் தெளிவான பாதுகாப்புக் கொள்கைகள், வலுவான அணுகல் கட்டுப்பாடுகள், தகவல் பரிமாற்றத்திலும் சேமிப்பிலும் குறியாக்கப் பாதுகாப்பு, பாதுகாப்பான திறவுகோல் மேலாண்மை, பாதுகாப்பான மென்பொருள் உருவாக்க நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவை அடங்கும்.
  • ஐஎஸ்ஓ 27701:2019 தரநிலை – என்பிபிஎல், தனியுரிமைத் தகவல் மேலாண்மை அமைப்பிற்கான (பிஐஎம்எஸ்) சான்றிதழைப் பெற்றுள்ளது. இது தனிநபர் தகவல்களை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் கையாள்வதில் எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. ஐஎஸ்ஓ 27701, ஐஎஸ்ஓ 27001 தரநிலையின் கொள்கைகளை விரிவுபடுத்தி, தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மேலாண்மைக்கான முழுமையான அணுகுமுறையை உறுதி செய்கிறது.

பாதுகாப்பு மற்றும் இணக்கப்பாட்டிற்கான எங்களின் அர்ப்பணிப்பு (எஸ்ஓசி 2 வகை II)அமெரிக்க சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்காளர்கள் நிறுவனம் (ஏஐசிபிஏ) வகுத்துள்ள சேவை அமைப்பு கட்டுப்பாடு 2 (எஸ்ஓசி 2) தரநிலைகளுக்கு ஏற்ப என்பிபிஎல் செயல்படுகிறது. என்பிபிஎல் தனது செயல்பாடுகளுக்காக எஸ்ஓசி 2 வகை II சான்றளிப்பு அறிக்கையை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. இது வலுவான பாதுகாப்பு நடைமுறைகள், நம்பகமான சேவை வழங்கல் மற்றும் தகவல்களின் பொறுப்பான நிர்வாகம் ஆகியவற்றில் எங்களின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இது உங்களுக்கு என்ன அர்த்தம்?

எஸ்ஓசி 2 வகை II அறிக்கை, சுயாதீனமான மூன்றாம் தரப்பினரால் பின்வரும் இரண்டு அம்சங்களுக்கும் உறுதிப்படுத்தலை வழங்குகிறது:
  • எங்களின் கட்டுப்பாட்டு அமைப்புகளின் வடிவமைப்பு
  • குறிப்பிட்ட காலப்பகுதியில் அவற்றின் செயல்திறன்
இதன் மூலம், எங்களின் பணியாளர்கள், செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் தகவல்களைப் பாதுகாக்கவும் நம்பகமான சேவையை வழங்கவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என்பது உறுதியாகிறது.

நம்பகமான சேவை அளவுகோல்களின் வரம்பு

எங்களின் எஸ்ஓசி 2 வகை II சான்றளிப்பு, பின்வரும் நம்பகமான சேவை அளவுகோல்களுடன் இணங்கும் கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது:
  • பாதுகாப்பு
  • கிடைப்புத் தன்மை
  • செயலாக்கத்தின் முழுமைத்தன்மை
  • இரகசியத் தன்மை
  • தனியுரிமை


தொடர்ச்சியான உறுதிப்படுத்தல்

எஸ்ஓசி 2 வகை II என்பது ஒருமுறை மேற்கொள்ளப்படும் மதிப்பீடு அல்ல; அது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடையாளமாகும். என்பிபிஎல் காலமுறை சுயாதீனத் தணிக்கைகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பு மற்றும் செயல்திறனின் உயர்ந்த தரநிலைகளை நிலைநிறுத்துவதற்காக தனது கட்டுப்பாட்டு அமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்பவும் இருப்பதை உறுதிசெய்கிறது.