வீடு / அறிமுகம் / போர்டு இயக்குநர்கள் / அஜேய் குமார் சவுத்ரி

திரு. அஜேய் குமார் சவுத்ரி

நிர்வாகப் பொறுப்பற்ற தலைவர் மற்றும் தனித்தியங்கும் இயக்குநர்

திரு. அஜேய் குமார் சௌத்ரி, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி புகழ்பெற்ற ரிசர்வ் வங்கி அதிகாரி ஆவார். அவர் அக்டோபர் 2023 இல் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றார். திரு. சௌத்ரி வங்கி ஒழுங்குமுறை, மேற்பார்வை மற்றும் ஃபின்டெக் துறைகளில் பல சாதனைகள் செய்தவர். பல ஒழுங்குமுறைகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். இவற்றில் வங்கிகளுக்கான பேசல் III ஃபிரேம் ஒர்க்ஸ் அடங்கும். கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் மேலாண்மை அணுகுமுறை மற்றும் செயல்முறை மேம்பாடுகளுக்கு பொறுப்பானவராகத் திகழ்ந்தார். பல்வேறு மேம்பாட்டு மற்றும் புத்தாக்க முன்னெடுப்புகளை நடமுறைப்படுத்துவதில் ஈடுபட்டார்.

RBI யில் இவர் வகித்த பங்கு பன்முகத்தன்மை கொண்டதாக விளங்கியது. வங்கி ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையைக் கண்காணித்தல், கரன்சி மேலாண்மை, பெமெண்டுகள் மற்றும் செட்டில்மெண்டுகள் மற்றும் தலைமை அலிவலகத்திலும் வட்டார அலுவலகங்களிலும் பிற முக்கிய செயல்பாடுகள் ஆகியவை உட்பட பல்வேறு பொறுப்புகளைத் திரு. சௌத்ரி திறம்படக் கையாண்டார். ஃபின்டெக் துறை, ஆபத்து கண்காணிப்பு துறை மற்றும் ஆய்வுத் துறை போன்ற முக்கிய துறைகளுக்கு இவரது தலைமைத்துவம் விரிந்தது. குறிப்பாக, சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியை (CBDC) நடைமுறைப்படுத்துதல், கிரிப்டோ அசெட்டுகள் தொடர்பாக ஒரு உத்திசார்ந்த அணுகுமுறையை உருவாக்குதல், ஃபின்-டெக் சம்பந்தமாகத் திறன்வாய்ந்த முறைபப்டுத்தும் தடுப்புக்காவல்கள், டெக்-ஸ்பிரிண்ட் செயல்பாடு மற்றும் ஒழுங்குமுறை சேண்ட்பாக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய புத்தாக்க முன்னெடுப்புகளை முக்கிய துறைகளில் நடைமுறைபப்டுத்தினார். தடையற்ற கடன் தளத்தை நடைமுறைப்படுத்தியதில் அவருக்கிருந்த முக்கிய பங்கு திரு. சவுத்திரியின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும். நிதித் துறையில் அவருக்கிருந்த முன்னோக்கு சிந்தனையை இது வெளிக்காட்டுகிறது

பல்வேறு சர்வதேச குழுக்களில் திரு.சவுத்திரி இந்திய ரிசர்வ் வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். BCBS நடத்திய இந்திய ரெகுலேட்டரி கன்சிஸ்டன்சி அசெஸ்மெண்ட் புரோகிராமை (RCAP) வெற்றிகரமாக நடத்திய RBI குழுவுக்கு இவர் தலைமை ஏற்றார். RCAP க்கான சர்வதேச குழுக்கள் மற்றும் பல்வேறு சட்ட எல்லைகளுக்கு உள்ளான பிற பணி ஒதுக்கீடுகளிலும் பங்கேற்றார். மொரிஷியஸில் பேங்க் ஆஃப் மொரிஷியஸின் மேற்பார்வை இயக்குநராக சேவைசெய்தார். இதில் வங்கிகள், வங்கி அல்லாத டெப்பாசிட் பெறும் நிறுவனங்கள் மற்றும் அந்நியச் செலவாணி விற்பனையாளர்கள் ஆகியோரை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல் இவரது பொறுப்பாக இருந்தது.

இவர் தில்லிப் பல்கலைக் கழகத்தில் இருந்து இயல்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். அதுமட்டும் அல்லாமல் ஸெர்ட்டிஃபைடு அசோசியேட் ஆஃப் இன்டியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் பேங்கிங் அன்ட் ஃபைனான்ஸ் (CAIIB) ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்முறை தகுதிகளையும் பெற்றவர். கவுன்டர்சைக்கிளிக்கல் கேப்பிட்டல் பஃபர்ஸ், கேப்பிட்டல் ரெக்யர்மென்ட் ஃபார் சாவரின் அசெட்ஸ், டீஃபால்ட் எக்ஸ்பீரியன்ஸ் ஆஃப் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிஸ் இன் இன்டியா. கார்ப்பரேட் இன்சால்வன்சி ரெஜிம் அன்ட் இட்ஸ் இம்ப்ளிகேஷன்ஸ் ஃபார் த இன்டியன் பேங்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பொருள்களில் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.