தனியுரிமை & பாதுகாப்புக் கொள்கை
அதன் வலைத்தளத்தை அணுகும் நபர்கள், அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் தகவலின் தனியுரிமை, ரகசியம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையைப் பொருந்தும் சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களுக்கு இணங்க பராமரிக்க NPCI/ BBPCU முற்றிலுமாக உறுதிபூண்டுள்ளது. தகவலின் பாதுகாப்பு, வெளிப்படுத்தாமை மற்றும் அந்தரங்கத்துக்கு NPCI/ BBPCU உலகத் தரங்களையும் நடைமுறைகளையும் கடைப்பிடித்து நடைமுறைப்படுத்துகிறது.
யாராவது ஒருவர் பாரத் பில்பே வலைத்தளத்துக்கு வருகை புரியும்போது, வலைத்தள நிர்வாகி குக்கீகளைப் பயன்படுத்தி பார்வையாளரின் பிரவுசரைப் பற்றிய புள்ளிவிவரங்களைக் கண்காணித்து சேகரிக்கிறார். இதில் பார்வையாளர் தளத்தை அணுகிய நேரம் மற்றும் தேதி, அவர் பார்வையிட்ட பக்கங்கள், இணைய டொமைன் மற்றும் அவர் தளத்தை எதில் இருந்து அணுகினாரோ அந்த ஐபி முகவரி மற்றும் தளத்தை அணுக அவர் பயன்படுத்திய பிரவுசிங் மென்பொருள் பற்றிய தகவல் ஆகியவை அடங்கும். இருந்தாலும், செயல்பாட்டுப் பதிவுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சட்ட அமலாக்க முகமையம் மேற்கொள்ளும் ஒரு புலனாய்வு தொடர்பான எதிர்பாராத நிகழ்வைத் தவிர பயனர்களை அடையாளம் காண தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க அல்லது வைத்துக்கொள்ள எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை.
NPCI/BBPCU க்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத மற்ற பல வலைத்தளங்களை அணுக பாரத் பில்பே வருகைபுரியும் ஒருவருக்கு உதவிசெய்கிறது. அத்தகைய வலைத்தளங்களின் உள்ளடக்கம் மற்றும் தனியுரிமை நடமுறைகளுக்கு NPCI/BBPCU பொறுப்பாகாது. ஒவ்வொரு வலைத்தளத்தின் தனியுரிமை அறிக்கைகளையும் ஆராயுமாறு NPCI/BBPCU வருகை புரிபவரை ஊக்குவிக்கிறது.
வலைத்தளத்தில் பாரத் பில்பே பற்றி ஒன்றை நீங்கள் விசாரிக்கும் போது
நீங்கள் பின்வருபவைகளை எங்களுக்கு வழங்குவீர்கள்:
- பெயர்
- தொடர்பு எண்
- மின்னஞ்சல் முகவரி
எந்த ஒரு விசாரணை தொடர்பாகவும் நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல், பற்றிய கேள்விகளுக்கு தீர்வு காண்பதற்காக NPCI/ BBPCU வால் சேகரிக்கப்பட்டு பொருத்தமான தீர்வுகளுடன் உங்களைத் தொடர்புகொள்ளும். சட்ட ரீதியாக தேவைப்பட்டால் அல்லது அப்படி செய்யச் சொல்லி நீங்கள் கோரினால் உங்கள் தகவல் NPCI/ BBPCU வால் வெளிப்படுத்தப்படும்.
ஒரு கார்ப்பரேட் அமைப்பான NPCI/BBPCU அதன் கொள்கையின்படியும், சட்டப்பூர்வ விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும், சட்டங்கள் மற்றும் விதிகள் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்டபடியும் பதிவுகள் மற்றும் தகவல்களைப் பராமரித்து வருகிறது. காகிதம் அல்லது மின்னணு வடிவத்தில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களின் அங்கீகரிக்கப்படாத அணுகல் NPCI/ BBPCU வால் அனுமதிக்கப்படுவதில்லை. தகவல் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அணுகல் அனுமதிக்கபப்டுகிறது. தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைத்திருக்கவும், சட்டத்தால் அல்லது நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமாக உத்தரவின்படி தேவைப்பட்டல் ஒழிய தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு வெளியிடக்கூடாது என்றும் NPCI/BBPCU உடன் வணிகம் செய்யும் நிறுவனங்களுடனான வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தில் இரகசியத்தன்மை விதி NPCI/BBPCU யால் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. NPCI/BBPCU உடனான உடன்பாட்டின் மூலம் மற்ற தரப்பினரால் பெறப்பட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தம் முடிவு/காலாவதி ஆகும் போது திருப்பி அனுப்பப்படும் அல்லது அழிக்கப்படும் என்று அத்தகைய வெளிப்படுத்தாத ஒப்பந்தங்கள் விதிக்கின்றன.
அந்தரங்கத் தகவலின் உருமையாளர்களுக்கு எந்த ஒரு இழப்பு அல்லது சேதாரம் ஏற்படாமல் தவிர்க்க எந்த ஒரு அங்கீகாரமற்ற அணுகல் அல்லது தரவு பாதுகாப்பு மீறலுக்கும் எதிராக பொருத்தமான செயல்பாட்டு, பௌதீக, எலட்ரானிக், நடைமுறை மற்றும் தொழிநுட்ப பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவது NPCI/BBPCU இன் பொறுப்பாகும்.
தகவல் பாதுகாப்பு அமைப்பின் சில சிறந்த அம்சங்கள் பின்வருமாறு:
- தகவலைப் பாதுகாக்க காப்பரண் (ஃபயர்வால்ஸ்), மறையாக்கம் (என்கிரிப்ஷன்) மற்றும் தரவு கசிவு தடுப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்
- சேவைகளைப் பெறும் முன் அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களைத் தணிக்கை செய்தல் மற்றும் அவர்களுடன் வெளிப்படுத்தக் கூடாத ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல்
- ஆபத்துகள் மற்றும் ஊடுருவும் சாத்தியக்கூறுகளைக் கண்டறிய NPCI/BBPCU வின் இயல்பியல் மற்றும் தொழில்நுட்பச் சூழலை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான எந்த ஓர் இடர்ப்பாட்டையும் அடையாளங்கண்டு தீர்வுகாண கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.
தொடர்பில் இருக்கவும்
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.
bbps@npci.org.in